ஏற்றப்பாட்டு contents.html about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் சுப்பிரமணியர்பேரில் கீர்த்தனங்கள் சென்னை - சூளை ஸ்ரீ 'பாரதி' அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

விருத்தம். எண்ணிலாச்செனனம் யெண்பத்துநான்கு லெட்சமாய்ப் பகுத்துப்பூர்வ புண்ணியவசத்தால் பொருவிலாமானிடப் புருடராய் வடிவெடுத்திந்த மண்ணினிற்பிறந்துன் மலரடிக்காளாய் வந்திலாச்செனன மெச்சென்மம் வெண்ணிலாவுமிழும் வேற்கரம்பிடித்த மெய்யனே ஆறுமாமுகனே தரு-இ-ம்-காம்போதி-ஆதிதாளம். பல்லவி. ஆறுமுகாயென்னைக் காருங்காருமையா - நல்ல அரவணிந்தோன் மகிழ் சரவணையிலுதித்த — ஆறு அநுபல்லவி வாருநற்சமையந்திருவள்ளிதெய்வானைசென்றிரு வஞ்சியுடனேயென்னாளுந் தஞ்சை வடவாயில்வாழும் சரணஙகள் மண்டலத்திலுள்ளளவுந் தொண்டர்மனக்கோரிக்கை மாதபூசம்நாளில் வந்துநிறைவேற்ற கொண்டுவந்தகாவடியிலுண்டகனசக்கரைபாலை குளிர அபிஷேகஞ்செய்து மலர் தூற்ற அண்டர்தொழும்பாதா யென்றுதெண்டனிட்டு முன்னேநின்ற அவரவர்நினைத்தயெண்ணம் தவறாமல் முடிக்கும்வண்ணம் — ஆறு நீட்டியகூர்வேலினாலே மாட்டியசூரனை வென்ற நின்னுடையவல்லமையை யென்சொல்வோ நாட்டிலுள்ள உன்னடியார் எட்டிலடங்குமோசொல்ல நானதிலோரந்தரங்கபக்தனல்லவோ கூட்டியெனையா தரித்து வோட்டிடுந்துயர்பிரித்து குன்னமில்லாவரந்தந்து வன்னமயிலேறி தந்து — ஆறு தாசர் தயாநீயென்று மாசில்லாமலுன்னைவேத சாஸ்திரமனைத்து முறையிடுகிறதே யீசனே கண் கண்டதெய்வங் காசினியில்நீயேஎன்றும் யெல்லவர்க்குங்கண்ணில் நாணப்படுகிறதே தேசிகனேநானுமுன்னை ஆசையோட்டுத்தயென்னை திருவிழியால்நோக்கிக்கொஞ்சங் கிருபைவைத்தாள் நீயேதஞ்சம் — ஆறு முத்துக்குமரேசாவென்று யெத்தனை விதம்வருந்தி முரையிட்டாலுமக்குக் கேழ்க்கவுமில்லை உத்தமனே உன்னை நம்பி இத்தனைநாள் கார்த்திருந்தும் உன்னருள்பெறாமலின்னம்பட வோதொல்லை சித்தமுற்றயென்விசாரம் பததம்வைத்து தீரின்னேரம் செம்பினேன் வெங்கடறாவுசீஷன் சுப்ரமண்யா வுந்தன் தாசன் — ஆறு வேறு மெட்டு விருத்தம். அலைகடற்றன்புனலள்ளியேகுளித்த அகஸ்தியர் தனக் கருள்புரிந்தோய் மலைக்குறவள்ளியை மணந்திடும்பொருட்டில் வையத்துளெவர்களும்வியப்ப சிலைக்கரவேடந்திகள் முடிவேந்தன் செந்துசிற்றம்பிரானெனவும் நிலைத்திடாவடிவம் நிமிஷத்திலெடுத்த நின்மலர்செய்திடுங்கருணை தரு-இ-ம்-ஆனந்தபைரவி-ஜம்பைதாளம். பல்லவி கருணையின்னமும் வல்லையோகுகாயென்னைக் காரக்கக்கடனுமில்லையோ. அநுபல்லவி. தருமலர்சோலைசூழுந் தஞ்சைவடக்குவாயில் பெருமையாயமர்ந்தகெம்பீராசூரசம்மார — கரு சரணங்கள் ஐயா அண்டினேன்மெய்யா-யென்னை யாதரித்தாளும்நீர்-முருகையா வையகமறியவுன்மைந்தனென்றிருக்கச் செய்யா தீர்என்மேல்மோடி சீலாகுணவடிவேலா — கரு வந்தாள் வரந்தந்தாள் தருணம் மரவேன்கனவிலும் வந்தாள் இந்தச்சொல்லுறுதியென் றிருதயத்தில்நம்பும் கந்தாயெந்தனையின்று காவாசிவயோகா — கரு ஏதோயித்தனை வாதோயெளி யேன்மீது மனமிரங்காதோ வாதைநானடையவும் வர் மம்நீர் செய்யலாமோ போதும்போதும்சா துவைபோகாதெய்வானை மோகா காரமோகடுந்தூரமோ-யென்னைக் காற்பது உமக்கொருபாரமோ ஆறாதித்தேன்பாடி ஆனந்தபைரவியால் பாருங்கிருபைகுருபரனே பன்னிருகரனே — கரு ஏசல் இராகம்-பியாகு-ஜம்பைதாளம். வாவாகுமரகுருபரனே -சுவாமி — வா தேவாதிதனைக்காத்த செழுங்குணகரனே திருவருள்பொழி துரந்தரனே துரந்தரனே துரந்தரனே-சுவாமி — வாவா ஜெனனமரணமின்றி திகழ்மோனவடிவே செப்புநான்மறை கெட்டாமுடிவே கெட்டாமுடிவே கெட்டாமுடிவே சுமாமி — வாவா தஞ்சமென் றுனை நம்புந் தாசர்தயாநிதியே தமியேனுக்குன் பாதங்கெதியே பா தங்கெதியே பாதங்கெதியே-சுவாமி — வாவா யாரோயென்றனைநீயும் அகத்திலெண்ணாதே அடியேன்மேல்வாது பண்ணாதே பண்ணாதே பண்ணாதே-சுவாமி — வாவா மாதாபிதாகுரு தெய்வமும்நீயே மைந்தன்மேல்கிருபை செய்வாயே-செய்வாயே செய்வாயே-சுவாமி — வாவா தாமதமினிசெய்தால் சகிப்பேனோயானே சரணமடைந்தே னென்கோனே யென்கோனே யென்கோனே-சுவாமி — வாவா தாசனைக்கார்த்திட சமயமுமீதே தாரும்வுன்னடியினையிப்போதே-யிப்போதே யிப்போதே-சுவாமி — வாவா வெங்கட்றாவுசீஷனுன் மேல்பதம்பாடி வேண்டினேன்மிகவுங் கொண்டாடி கொண்டாடி கொண்டாடி-சுவாமி சுப்பிரமணியர் கீர்த்தனம் முற்றிற்று.
Contents | Home